Coimbatore Blog

Coimbatore News

Share

பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை

The World's largest Nataraja statue made from 'Ashtadhatu'

The World's largest Nataraja statue made from 'Ashtadhatu' (eight metals) has been installed in front of Bharat Mandapam, which is the venue for the G20 summit in the national capital.
The 27 feet tall, 18-ton-weight statue is the tallest statue made of Ashtadhatu and is sculpted by the renowned sculptor Radhakrishnan Sthapaty of Swami Malai in Tamil Nadu and his team in a record 7 months.
The statue was transported to the national capital in four days and a special green corridor was created for its transportation.
புதுடில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9,10ம் தேதி நடைபெற உள்ள ஜி-20 மாநாடு அரங்கத்தின் முகப்பில், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலையை சேர்ந்த ஸ்ரீ தேவசேனா சிற்பக் கூடத்தில், அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்ட 28 அடி உயர நடராஜர் சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி கிராமத்தில் வரதராஜன் என்பவர் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற பெயரில் சிற்பச்சாலை நடத்தி கடந்த 24 ஆண்டுகளாக சிலை வடிவமைப்பில் சிறந்து விளங்கி வருகிறார்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருக்கும் நடராஜர் மற்றும் கோனேரிராஜபுரம் விக்ரகங்கள் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட மிகவும் பழைமையான வடிவிலானவை. அதேபோன்று முயலவன் மீது ஆனந்த தாண்டவம் ஆடும் வடிவிலான நடராஜர் திருமேனியை வடிவமைக்க வரதராஜன் முடிவு செய்தார். உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலையாகத்தான் வடிவமைக்கும் சிலை இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்.
வேலுார் நாராயண சக்தி பீடத்தின் ஒத்துழைப்போடு நடராஜர் சிலை வடிவமைப்பதற்கான பணிகளை வரதராஜன் தொடங்கினார். கடும்முயற்சியின் பலனாக ரூ 4 கோடி மதிப்பில் நடராஜர் சிலையினைச் செய்து முடித்துள்ளார் வரதராஜன்.
Hits: 1138, Rating : ( 5 ) by 1 User(s).